சத்திய மார்க்கம்.காம்
வரலாற்றாசிரியரும் சிறந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. அமரேஷ் மிஸ்ரா, உலகை நடுக்கிய மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மொஸாதும் ஹிந்துத்துவமுமே என்றும் அவ்வாறு இருப்பதற்கான சாத்தியங்கள் என்ன என்பதையும் முன்னர் தெரிவித்திருந்தார். அவரின் அக்கட்டுரை வெளியான நாளிலிருந்து அவருக்கு எதிராகப் பல மிரட்டல் குரல்களும் ஏளன குரல்களும் உயர்ந்திருந்தன. மும்பைத் தாக்குதல் குறித்து தான் ஏன் அவ்வாறான நிலைக்கு வர வேண்டி இருந்தது என்பதையும் தான் முன்னர் கூறிய "மொஸாதும் ஹிந்துத்துவமுமே" மும்பை தாக்குதலில் செயல்பட்டுள்ளன என்பதற்கான உறுதியான மேலும் பல கேள்விகளையும் தொடுத்து பதிலளித்துள்ளார்.

"மும்பைத் தாக்குதலின் பின்னணியில் மொஸாதும் ஹிந்துத்துவத் தீவிரவாதிகளும் செயல்பட்டுள்ளனர்" என்ற என்னுடைய குற்றச்சாட்டைக் குறித்துச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். எதனைக் குறித்து வேண்டுமானாலும் சந்தேகப்படவும் கேள்வி எழுப்பவும் அனைவருக்கும் முழு உரிமை உண்டு. சரியான பாதைக்கான எல்லா சிந்தனைகளின் பிறப்பிடம் சந்தேகம்தான்.

மும்பைத் தாக்குதலைக் குறித்து இணையம் வழியாக இந்தக் கருத்தைத் தெரிவித்த எனக்கு, கொலை மிரட்டல்கள், வசவு மெயில்கள் போன்றவற்றிற்கு மேலாக என்னுடைய தைரியத்தையும் பகுத்தறிவினையும் கேலிக்குள்ளாக்கிய எச்சரிக்கைகளும் கிடைக்கப் பெற்றன. மேலும் படிக்க சத்திய மார்க்கம்.காம்