தினமலர் நாளிதழ் (26.04.2012) KEO கூட்டம்

துபாயில் KEO வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்

தின மலர் ஏப்ரல் 26,2012 IST




துபாய்கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷனின் (கூத்தாநல்லூர் ஜமாஅத்) வருடாந்திர பொதுக் குழு கூட்டம் தேரா அன்னபூர்ணா ஹோட்டலில் நடைபெற்றது.   தலைவர் கழனி அஹமது மைதீன் முன்னிலையில்,   பி.எம்.ஏ.முஹம்மது சிராஜுதீன் கூட்ட தலைவராக இருந்து கூட்டத்தை நடத்தினர். 2010 - 2011 வருடத்திய ஆண்டறிக்கை சமர்பிக்கப்பட்டது. ஊரின் வளர்ச்சி மற்றும் ஆக்கப்பணிகள் குறித்து உறுப்பினர்கள் யோசனைகளையும், கருத்துகளையும் தெரிவித்தனர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  புதிய தலைவராக பி.ஏ.ரஃபீக் முஹம்மது, செயலாளராக அல்வாணி அக்பர் அலி, பொருளாளராக எஸ்.எம்.எச்பாவா முஹையதீன் தேர்வு செய்யப்பட்டனர்.


நன்றி:  தினமலர் செய்தியாளர் முதுவை ஹிதாயத்
AK