நமதூருக்கு பல சேவைகள் செய்த பெரிய தெரு வடக்குக் கோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளையின் அறங்காவலரரும்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைத்தலைவரும், சமுதாய புரவலரும், கவிஞர், சமுதாயப் பாடகர் வடக்குக் கோட்டையார் அல்ஹாஜ் வி.எம். செய்யது அஹமது அவர்கள் இன்று (திங்கள் 03.02.2014காலை சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைமையகமான காயிதே மில்லத் மன்ஜிலில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இறைவாஇவரை மன்னிப்பாயாக!     நேர்வழிபெற்றவர்களுடன் சேர்த்து 
இவரது தகுதியை உயர்த்துவாயாக!    இவர் விட்டுச்சென்றவர்களுக்கு  
நீபொறுப்பாலனாகுவாயாக அகிலத்தின் அதிபதியே!இவரையும்
எங்களையும்  மன்னிப்பாயாக 
இவரதுமண்ணறையை விசாலமாக்குவாயாக! 
அதில் இவருக்குஒளியை ஏற்ப்படுத்துவாயாக

அன்னாரின் மறுமை வாழ்வுக்கு துஆ  செய்வோமாக! ஆமீன்  
                  KEO  அமீரகம்