ரமலான் முபாரக்...!!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பார்ந்த தங்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

UAE யில் வாழும் கூத்தாநல்லூர் சகோதரர்களுக்கு
நமது KEO வின் மூலம் கடந்த 20 வருடங்களாக நமதூர் மக்களுக்கும், நமதூருக்கும் எண்ணற்ற சேவைகள் பல புரிந்து வருகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்! இதற்காக இறைவனை எப்படிப் போற்றிப் புகழ்ந்தாலும் அது ஈடாகாது!

இதற்காக உதவி வரும் UAE யில் வாழம் அனைத்து கூத்தாநல்லூர் சகோதரர்களுக்கும், ஊரில் இருந்து செயல் பட்டு வரும் நமது சகோதரர்களுக்கும் வல்ல அல்லாஹ் விடம் இப்புனித ரமழானில் இருகரம் ஏந்தி துஆ செய்கின்றோம். யா அல்லாஹ்,

♦இப்புனித மிகு ரமழானின் பொருட்டால் எங்கள் அனைவரின் பாவங்களையும் மன்னித்து அருள்வாயாக,

♦எங்களின் நோய்களை நீக்குவாயாக, எங்களின் கடன்களை நீக்குவாயாக,

♦ எங்களை அனைத்து தீய எண்ணங்களை விட்டும், தீய செயல்களை விட்டும், தீய குணங்களை விட்டும் பாதுகாத்து அருள் புரிவாயாக.

♦எங்களுக்கு மன அமைதியும், சந்தோசமும், நிம்மதியும் நிறைந்த ஆரோக்கியமான நல் வாழ்வை வழங்கிடுவாயாக,

♦எங்களை ஒற்றுமையுடனும், ஈமானுடனும் இறுதி வரை வாழ அருள் புரிவாயாக, ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்.

அன்பார்ந்த சகோதரர்களே!

வாங்கும் கையை விட வழங்கும் கை மேலானது, தர்மம் தலைகாக்கும், இட்டார் பெரியோர் – இடாதார் இழி குலத்தோர், அறம் செய்ய விரும்பு போன்ற வாசகங்களுக்கு ஏற்ப கல்லாமையை ஒழிக்க, ஏழ்மை நிலையால் வாடும் நமது சொந்தங்களுக்கு உதவ, நோயாளிகளுக்கு உதவ, நமதூர் செழிக்க, சிறக்க, இறைவன் உங்களுக்கு கொடுத்திருக்கும் அருட்கொடைகளில் இருந்து தர்மம் செய்யுங்கள்.

உங்கள் செல்வம் வற்றாத ஊற்றாகப் பொங்கி நிற்கும் ! வளமான வாழ்வாக உங்கள் வாழ்வு புகழ் பெறும்.

இறைவனின் அன்பையும், அருளையும் பெற்று வாழ வல்ல அல்லாஹ் அருள் புரிவனகவும். ஆமீன்.

ரமலான் முபாரக்.