KEO நமது சகோதரர்களுக்காக அறிமுகம் செய்த சிறுசேமிப்புடன் கூடிய வட்டியில்லா கடன் திட்டம் வல்ல நாயனின் கிருபையாலும், உயரிய நோக்கத்தினாலும் சிறப்பாக நடைமுறையில் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


நாம் கஷ்டப்பட்டு பொருள் ஈட்டக்கூடிய பணத்தில் ஒரு சிறு தொகையினை சிறுசேமிப்பின் மூலம் சேமித்து வந்தால் நம்மையும் அறியாமல் ஒரு பெரும் தொகை தக்கசமயத்தில் நமக்கு உதவியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது. நமது அன்றாட வாழ்வில் நமக்கு தேவைகள் இருந்தவண்ணம் என்றும் இருக்கும் அதிலும் அமீரக நண்பர்கள் தங்கும் வீட்டு வாடகை, அன்றாட உணவு, நமது சொந்த தேவைகள் ஆகிய இதுபோன்ற செலவுகள் நாம் எதிர் நோக்கியே வாழும் சூழலில் நாம் இருந்து வருகின்றோம். இந்த செலவுடன் ஒரு சிறிய தொகையை சேமிப்பாக சேர்த்து வந்தால் அவை நமக்கு காலாப்போக்கில் பெரும் தொகையாக திருப்பிகிடைக்கும் சமயத்தில் நாம் எண்ணிலடங்கா சந்தோசம் கொள்வோம். மற்ற செலவிங்கள் நமக்கு திருப்பி கிடைப்பதில்லை ஆனால் நீங்கள் செலவாக நினைத்து சேமித்த தொகை நமக்கு பெரும் பேருதவியாக தக்க சமயத்தில் கை கொடுக்கும் சகோதர்களே...!


ஆகவே, அன்பு கூத்தாநல்லூர் சகோதரர்களே அமீரகத்தில் தாங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட KEO சிறுசேமிப்புடன் கூடிய வட்டியில்லா கடன் திட்டத்தில் தங்களை இணைத்து கொண்டு உங்கள் வருங்கால தேவைகளை பூர்த்தி செய்ய இன்றே சேமியுங்கள் "சிறுதுளியே பெரும் வெள்ளம் ".


சட்டதிட்டங்கள் மற்றும் விண்ணப்பங்கள் நமது KEO அங்கத்தினர்களிடம் வாங்கி உடன் பூர்த்தி செய்து தங்களை இணைத்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


மேலும் விபரம் அறிய வேண்டுவோர் எங்களை தொடர்பு கொண்டால் விபரம் வழங்கப்படும். 


KEO சிறுசேமிப்பு ஈமெயில் முகவரி keo4urs@gmail.com என்ற முகவரி மூலமும் தொடர்பு கொள்ளலாம்.