பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றி வரும் தமிழ்நாடு மாநில ஜமாஅ(த்)துல உலமா சபை துணைத் தலைவரும், திருவாரூர் மாவட்டம் ஆவூர் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலின் தலைமை இமாமுமாகிய மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் 'செங்கோட்டைச் சிங்கம்' மு. அப்துஷ் ஷக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத் அவர்கள், இன்று (செவ்வாய் 29.07.2014) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கோவையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஹழ்ரத் அவர்களுக்கு வயது 65.அன்னாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் (புதன் 30.07.2014) லுஹர் தொழுகைக்குப் பிறகு   திருவாரூர் மாவட்டம் ஆவூரில்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அரபி மொழித்துறையில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் பிரபல மார்க்க சொற்பொழிவாளர்,முன்பு துபாய் கோட்டை பள்ளியில்         குர்ஆன்தர்ஜுமாவிளக்கவுரைநடத்தியவரும், எழுத்தாளர்,இளம் முனைவர் 'செங்கோட்டை இளஞ்சிங்கம்' மவ்லவீ அ. முஹம்மது இஸ்மாயீல் ஹஸனீ M.A., M.Phil., அவர்கள், மர்ஹூம் ஹஜ்ரத் அவர்களின் மகனார் ஆவார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா'எனும் அழகிய பொறுமையை தந்தருளவானாகவும்.