துபாய் KEO வாழ்த்தி துஆ செய்கின்றது

                 துபாய்  KEO  வாழ்த்தி  துஆ  செய்கின்றது 

அரபுலகில் தலைசிறந்த 120  இந்திய தொழிலதிபர் பட்டியலில் முதல் பத்து இடத்தில் தமிழர் இடம் பெற்றார் !



போர்பஸ் பத்திரிக்கையின் மத்திய கிழக்கு பதிப்பான “போர்பஸ் மிடில் ஈஸ்ட்” அரபுலகத்தின் 2014க்கான தலை சிறந்த 120  இந்திய தொழிலதிபர்களை தேர்வு செய்து பட்டியல் வெளியிட்டுள்ளது. 
அதில்  துபாயை தலைமை இடமாக கொண்டுள்ள ஈடிஏ-அஸ்கான் ஸ்டார் நிறுவனத்தின் துணை தலைவர் தொழிலதிபர் செய்யது எம். சலாஹூதீன் முதல் 10 இடங்களில் 5வது இடத்திற்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவராவார்.
கேரளாவை சேர்ந்த எம்.ஏ.யூசுப் அலி மேனேஜிங் டைரக்டர் லூலூ குரூப் இண்டர்னேசனல்,பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.120 பேர் பட்டியலில் மேலும் சில தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.


நன்றி ;  தினகரன்  26.08.2014