இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

நமது  K E O வின் ஆற்றல் மிகுந்த  நிர்வாக உறுப்பினரும் சிறந்த சமூக சிந்தனையாளருமான (கமாலியாத்தெரு - பாதுஷா ஸ்டோர்) நண்பர் கணக்கப்பிள்ளை நசிருதீன் (வயது 47) இன்று 26/04/2014 அதிகாலை சுமார் 1.30 மணிக்கு வபாத் ஆகிவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின்  குற்றங்களை மன்னித்து, தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,
உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் KEO வின் அனைத்து உறுப்பினர்களும் பிரார்த்தனை செய்கிறோம்.   ஆமீன்.!!